காதல் சுகமானது

வாழவேண்டும் நான்
உன்னோடு ..
வாழும்நாள் யாவுமே
உன் நினைவோடு..
கண்கள்மூட நான்
நீ கவிபாடு ..
காத்திருக்கிறேன் மண்மீது
காதல் கொண்டதோ உன்மீது..
துடிக்கும் என்
நெஞ்சமும்,
இமைக்கும் இரு
விழிகளும் ,
உனைக் காணப்போவது எப்போது?

வழி ,
போகும் போக்கிலே
என் நாள்போக
எந்நாள் வாழும் பொழுதுகள்
உனதாக,
மனதோடு ஊடுருவும்
உன் காதல் மெல்ல,
கண்கள் தனைமறந்து
நாணம்கொள்ள ,
என் பெண்மைதன்
காதல் எண்ணி
பெருமிதம் கொள்ளும்
உன்னாலே என் உயிரே....

"பகலவன்பாற் காதல் கொண்ட
நிலவவளின் ஆசை மொழிகள்........."

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 7:36 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 142

மேலே