அவன் பிரிவு
உலகின் ஒவ்வொரு நகர்விலும்...
உன்னை மட்டும் பார்க்கின்றேன்....
உனக்கு பிடித்த பாடல்கள் எல்லாம்....
விரும்பி கேட்கிறேன்..
அழைக்க மாட்டாய் என்று தெரிந்தும்...
அதற்காக மட்டும் காத்திருக்கிறேன்...
நகர்ந்து செல்கிறாய் நீ..
நலிந்து போகிறேன் நான்...
ஆயிரம் வரிகள் நான் அனுப்ப..
மூன்று எழுத்தில் நீ பதில் உரைக்கும்..
அந்த நொடியும் இல்லாமல்..
அனலில் அழுகிறேன்.....
ஒவொரு நொடியும் உன்னை நினைக்கும் போதெல்லாம்
என்னை நீயும் நினைப்பாயா என்று
நினைத்து ஏங்கும் என்னை....
நினைப்பாயா ஒரு நொடியாவது ...