ஊஞ்சலாடும் பெண்ணே உஷார்

வல்லமை இதழ் நடத்திய
படக்கவிதைப்போட்டியில்
எழுதிய தலைப்பும் கவிதையும்..

===============================
ஊஞ்சலாடும் பெண்ணே உஷார்..!
===============================

இங்கும் அங்குமாக ஆடியசைந்தாடும் ஊஞ்சல்தானது..
……….ஓய்ந்திடும்போது உதைத்தாடுவதினால் இன்பம் தரும்.!
மங்காதபுகழுடன் வாழத்தான் நானிலத்தில் மாந்தர்கள்..
……….மன்றாடி வாழ்க்கையிலுயர ஊஞ்சல்போல ஆடுவர்.!
தொங்கும் சங்கிலியே ஆடுமூஞ்சலுக்கு ஆதாரமதுபோல..
……….தொடருமுமின்ப துன்பபிணைப்பே நமக்குப் பிடிமானம்.!
தங்குமுலகில் முன்னேற தடைகற்கள் பலவுண்டாமதை..
……….தக்கசமயம் வரும்போது தாண்டிவரப் பழகவேண்டும் .!


பிஞ்சும்பூவும் காயும்கனியும் நிழல்தரும் மரத்தினிலே..
……….பிஞ்சு மனதுடன் ஆடிக்களிக்கும் வயதுதானெனினும்..
ஊஞ்சலாடும் உல்லாசச்சிறுமியே உலகை மறந்தாடும்..
……….உனக்கொரு உபதேசம் சொல்லவந்தேன் கேட்பாயா..?
நஞ்சில்லாப் பாம்புபோல் நட்புலகில் நடிப்போருண்டு..
……….நட்பாகப் பழகினாலும் யாரையுமெளிதில் நம்பிவிடாதே.!
வஞ்சகமாந்தர்கள் செய்யும் சூழ்ச்சிவலையு மிருக்குமதில்..
……….வீழ்ந்திடாமல் போராடவும் தெரியவேண்டும் பாப்பா..!


அஞ்சுதல் ஆருக்கும் கூடாதாம்..அறிமுகமில்லாநபரை..
……….அருகில்சேர்க்கா விலகியிருக்க வாழ்வில்நீ கற்றுக்கொள்.!
சஞ்சலமென்பதும் வாழ்க்கையில் எப்போதும் வேண்டாம்..
……….சபலபுத்தி கொண்டோரை சற்றும்கிட்ட நெருங்கவிடாதே.!
நெஞ்சை நிமிர்த்திநேரான பார்வையொடு கூர்ந்துநோக்கி..
……….நட்பெனும் போர்வையோடுவரும் நஞ்சைநீயறியவேணும்.!
அஞ்சாமல் அவர்களைநீ எதிர்த்தாடப் பழகவெண்டும்..
……….அந்தகனை அடையாளம் கண்டொதுக்க வேண்டும்.!
===========================================================
நன்றி படம்:: ஷட்டர்.காம்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (1-Sep-17, 1:25 am)
பார்வை : 87

மேலே