சேர்த்து வைத்த கனவு
![](https://eluthu.com/images/loading.gif)
சேர்த்து வைத்த கனவு !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்
பகலில் நினைவலைகள்
இரவில் கனவலைகள்
இடையிலோ
எண்ண அலைகள் !
எண்ண அலைகளோ ஒரு
இயங்கும் வண்ணப்பறவை
அது கலக்கும்
நினைவலை உறவை
பிறக்கும் கனவலைகள் !
எண்ணங்கள் நினைவுகள்
பிரதிபலிப்புகளே
நாம் காணும் கனவுகள் !
நல்ல எண்ணங்கள்
அள்ள அள்ளக் குறையாமல்
சேர்த்து வைத்து
செயல்பட்டால்
மனிதன் புனிதமாவான் !
நல்ல கனவுகளையும்
எண்ணத்தின் செயல்பாடுபோல்
சேர்த்து வைத்தால்
கனவுகளும் புனிதமாகும் !
நல் எண்ணம்போல்
கனவுகளையும்
சேர்த்து வைத்தால்
கனவுகள் நனவாகும்
நனவுகளும் புனிதமாகும் !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை