வாழ வேண்டுமடா

நான் உன்னிடம்
பேசவில்லை என்பதற்காக....
உன்னை நினைக்கவில்லை
என்பதில்லை.
இப்பொழுதெல்லாம்
உன்னை நினைப்பதில்
நிறைய மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கிறது தெரியுமா? ?
ஆம்,
நடக்கும் போதும்,

தும்மலின் போதும்,

இடறி விழும் தருணத்திலும்

உன் நினைவுகள்
என்னை வாட்டி வதைக்கிறது.

வாழ வேண்டுமடா உன்னுடன்
இன்னும் அதிகமாக......

அன்பே,
உன்னோடு பேசியதைக் காட்டிலும்
உன் நிழற்படங்களோடு
பேசியதே அதிகம்.

உன்னோடு நான் அலைந்ததைவிட,
உன் நினைவுகளுடன் அலைந்ததே
அதிகம்.

வாழ வேண்டுமடா... உன்னுடன்!
இன்னும் அதிகமாக. ..

காந்தம் தோய்ந்த கண்ணினால்
ஈர்த்தவனே.....

உன்னுடைய ஒவ்வொரு
தொடுதலுக்கும் அர்த்தம் அளித்தவனே...

எனது தேவைகளை
சந்தித்த எனது உயிரே....

வாழ வேண்டுமடா.. உன்னுடன்!!
இன்னும் அதிகமாக....

இப்படிக்கு,
உன் நினைவுகளைச் சுமக்கும்

தமிழி. .....

எழுதியவர் : மு.முருகேஸ் (3-Oct-17, 11:11 pm)
Tanglish : vaazha vendumadaa
பார்வை : 331

மேலே