கண்டும்

கையால் ஆகாதவர்களாய்
போய் விட்டோம்,
இத்தனை கோடி மக்களும்.

கண்முன்னே நடப்பதைக்
கண்டும், காணாமல் போகும்
அரசியல் பேடிகள்
அரசியல் கேடிகள்.

எவன் சட்டையையாவது
பிடித்துவிட முடியுமா?
எவன் கன்னத்திலாவது
அறைந்துவிட முடியுமா?
எவன் பதவியையாவது
பறித்துவிட முடியுமா?
நம்மால்.

சட்டமும், காவலும்
சண்டாளர்களுக்குத்
துணை போகிறது.

எல்லா அக்கிரமங்களையும்
எல்லா அநியாயங்களையும்
வக்காலத்து வாங்க – ஒரு
வாங்கித்தின்னிக் கூட்டம் இருக்கிறது.

இத்தனை கோடி மக்களும்
கையால் ஆகாதவர்களாய்ப்
போய் விட்டோம்.

எழுதியவர் : கனவுதாசன் (7-Oct-17, 4:48 pm)
Tanglish : kandum
பார்வை : 56

மேலே