தரிசனம் தாராயோ

உறங்கினால் கனவிலும்
விழித்திருந்தால் நினைவிலும்
வந்து வந்து செல்கிறாள்
புன்னகை பூக்கிறாள்...

ரயில் பயணங்களிலும்
அவள் நினைவுகள்
என்னோடு பயணிக்கிறது
பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும்
அவள் உருவம் எனக்கு தெரிகிறது...

உள்ளிருந்தாலும் அவள் நினைவு
வெளியிலும் அவள் நினைவு
சதா அவள் நினைவாகவே வாழ்கிறேன்...

ஒவ்வொரு நொடியும்
வஞ்சியவளின் பெயரையே
என் உதடுகள் மௌனமாக
உச்சரிக்கிறது..

என்ன செய்வேன்
காவிரியும் சில நேரங்களில்
அணைதாண்டி வருகிறது
இவளுக்கு அணை போட்டதாரோ
என் ஏக்கத்தை களைய
என்று தருவாளோ தரிசனம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Oct-17, 9:31 am)
பார்வை : 709

மேலே