யாதுமாகிய நீ

ஐந்திற நாவின்
நுகர்வு நாளங்களில்
ஆறாம் சுவையாய்
நீ!
ஒண்பான் நிலைகளில்
ஒடுங்கிடும் வாழ்வினில்
பத்தாம் பயனாய்
நீ!
நானிலை நொறுக்கிடும்
நிலையிலா தேகத்தில்
நீளும் பிறவியாய்
நீ!
ஆறறி மூளையின்
அகன்ற யோசிப்பில்
ஏழாம் வேற்றுமையாய்
நீ!
மூண்டிடும் மயக்கங்கள்
மூவடி மொழிதலில்
அடுக்கிடும் சொற்களில்
அணியாகி...
அடங்கா ஆசையில்
எழிலாகி...
ஏதுமற்ற இவனுள்ளே
யாதுமானாய் நீ!!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (1-Nov-17, 5:10 pm)
பார்வை : 534

மேலே