உச்சிதனை நான்முகர

தாயென மீள்பிறந்தேன்..
தாறுமாறு சந்தோஷத்தில்...!

ஒன்பதுமாச உயிர்தவமே
உன்கண்ணில் என்னுருவம்...!
உயிர்தெய்வம் எதிர்கண்ட
என்கண்ணில் ஏகாந்தம்...!

உச்சிதனை நான்முகர
கச்சிதமாய் நீசிரிக்க
உளங்குளிர்ந்த மேகமாய்
கரைகிறேன் வெள்ளமாய்...!

எழுதியவர் : காசி தங்கராசு (3-Nov-17, 4:18 am)
பார்வை : 174

மேலே