நித்தமுன் புன்னகை

நித்தமுன் புன்னகைக்காய் ஏங்கித்தவித்து எதிர் நின்றிட
சித்தமெல்லாம் குளிர சிந்தினாய் சிறு புன்னகை
அளவில்லா ஆனந்தம் உன்னருகில் உருகிநின்றிட
கண்கள் பொழிந்த காதலில்
மூழ்கி மூர்ச்சையாகி மோட்சம் அடைந்திட
மறுமுறையும் உதிர்த்திடு உதட்டோர புன்னகை
புத்துயிர் கொண்டு நான் மீண்டும் பிறந்திட...!!!

எழுதியவர் : ஜெகன் ரா தி (4-Nov-17, 11:43 am)
பார்வை : 2059

மேலே