யார் இறைவன்

காரணங்கள் தேவையில்லை பிறரிடத்தில் அன்புகாண்பிக்க....

பசி என்ற ஒரு உணர்வுதான்
எல்லா உயிர்களுக்கும் ஒற்றுமையான உணர்வு.....

நாம் எதற்கு தேடி அலைகிறோம்....
ஓயாத அலையாய் இந்த மனித கடலில்....
எவரிடத்திலும் பதில் இல்லை .....

நான் ஒன்றும் புதியதாக சொல்ல விரும்பவில்லை..
ஆனால் ஒன்றுமட்டும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்...

பிறரிடத்தில் அன்பைகாட்டுங்கள்....
சகோதரனாக அன்னத்தை ஊட்டுங்கள்....

நீ ஈ என்று இரப்பவருக்கு பசி தீர்ப்பாய் என்றால் ....
அவனிடத்தில் நீ இறைவனாக போற்றப்படுவாய்..

யார் இறைவன்
நீதான் இறைவன் ......

எழுதியவர் : உங்கள் வாகை (8-Nov-17, 11:32 am)
Tanglish : yaar iraivan
பார்வை : 204

மேலே