அழகின் அட்சயபாத்திரம்

இப்பிரபஞ்சத்துடன் விளையாடிக்கொண்டிருக்கும் பேரழகி நீ

அன்னார்ந்துபார்க்கையில்
அழகாய்சிரிக்கையில்
ம்.. என்ன? ம்.. என்ன? என்கையில்
செல்லமாய் டூ போடுகையில்
அடம்பிடிக்கையில்
ஆகாயத்தை கட்டியணைக்கையில்
அயர்ந்து தூங்கையில்
விழித்து பின் கண்கள் கசக்கையில்
மங்கையாய் பேசுகையில்
என ஒவ்வொரு நொடியும்
ஏதோவொரு அபிநயம் காட்டுகிறாய்..

உலகை ரசிப்பவனுக்கு
அள்ளஅள்ள குறையாத
அட்சயபாத்திரம் நீ

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (11-Nov-17, 6:12 pm)
பார்வை : 1233

மேலே