சார் ஒரு நிமிடம்

சிப்பிக்குள் இருக்கும் வரை
முத்தின் மதிப்பு தெரிவதில்லை
பட்டை தீட்டும்வரை
வைரத்தின் ஜொலிப்பு தெரிவதில்லை...

தூங்கும் குழந்தைக்கு
யாரும் பாலுட்டுவதில்லை
அழுத பிள்ளைத்தான்
பசியாறுகிறது...

தானாக மாறுவதில்லை
மாற்றத்தை
ஏற்படுத்தவேண்டும்
தட்டும்வரை கதவுகள்
திறக்கபடுவதில்லை
திறக்கும்வரை
தட்டிக்கொண்டே
இருக்கவேண்டும்...

உன்னிடம் உள்ள
சக்தியை வெளிகாட்டு
ஆசைப்படு அத்தனைக்கும்
ஆசைக்கேற்றபடி அல்லல்படு
உனக்கு நீயே சமரசம் செய்யாதே...

எட்டி எட்டி புளிக்கும்
என்று விடாதே
எட்டிப்பறித்து சுவைத்தபின்
புளிப்பா இனிப்பா என்று
உறுதிச்செய்
காலம்வரும் என்று
காத்திருக்காதே
உன் எதிர்காலம் உன் கையிலே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Dec-17, 5:04 am)
Tanglish : saar oru nimidam
பார்வை : 845

மேலே