பெண் எனும் பிரபஞ்சம்

பெண் எனும் பிரபஞ்சம் ! கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

பெண்ணே நீ
மஞ்சத்தில் ஆடவர்
கொஞ்சி விளையாடும்
பொம்மை அல்ல.

பெண்ணே நீ
மஞ்சத்தில் உறவாடி
உணர்வில் கலந்து
உயிரில் சேர்ந்து
கருவைத் தாங்கும்
பிரபஞ்சம் எனும்
பொன் மகள்.

பெண்ணே நீ .
அடைகாக்கும்
பெட்டைக்கோழி அல்ல
பிரபஞ்சமே வியக்கும்
ஆடும் மயில் நீ !

பெண்ணே நீ
நிற்கும் மலையோ
ரசிக்கும் சிலையோ அல்ல
பிரபஞ்சம் எதிர்நோக்கும்
வான் மழை !

பெண்ணே நீ
மனித இதயங்களை
புனிதமாக்கும்
பிரபஞ்சமே நீ !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (8-Dec-17, 12:21 pm)
Tanglish : pen yenum prabanjam
பார்வை : 242

மேலே