மாற்றங்கள் ஆயிரம் பாகம் 1

இது ஒரு தொடர்கதையாக வலம் வர போகிறது,,,,
இந்த கதை மூன்று தலைமுறைகளாக நடந்து வரும் உண்மை சம்பவம்,,,,

ஒரு பெரிய பண்ணையாரின் குடும்பம் .......... கணவன் , மனைவி, அளவில்லா குழந்தைகள் அதாவது ஆறு குழந்தைகள் ,,, முதலில் ஒரு பையன் , அடுத்ததாக ஒரு பெண், மீண்டும் ஒரு பையன், அடுத்து வரிசையாக மூன்று பெண் குழந்தைகள்,, இதில் இரு முறை இரட்டை குழந்தைகள் இறந்தே பிறந்திருந்தது,,,அதனால் எண்ணிக்கை ஆறு,, இல்லையென்றால், பத்தாக இருந்திருக்கும்,,,
எண்ணற்ற ஆடு மாடுகள், ஏக்கர் ஏக்கராய் வயல்வெளிகள்,, தோட்டங்கள் , மாட்டுவண்டி முதல் மிதிவண்டி வரை வாகனங்கள்,,ஏன் என்றால், அந்த காலத்தில் மிதிவண்டி வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என அர்த்தம்,,,
முதல் பையனின் பெயர் முருகன் , முதல் பெண்ணின் பெயர் சாந்தி, அடுத்த பையனின் பெயர் குமார், முறையே அடுத்த மூன்று பெண் குழந்தைகளின் பெயர் சுமதி , பவானி, செல்வி ..... குழந்தைகளும் வளர்கின்றனர் ,, அவர்களுடன் இணைந்து பிரிவும் வளர்கிறது,,,
நான்கு பெண்களும் பள்ளி படிப்புக்கு மேல் தொடர வில்லை,, முதல் பையன் பாலிடெக்னீக் படிப்பதற்காக செல்கிறான்,, ஆனால், தாயானவள் இரண்டாம் பையனை படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கோவில் காட்டும் வேலைக்கு செல்ல சொல்கிறாள்,,,
அங்கிருந்தே தொடர்கிறது தாயின் ஓரவஞ்சனை,,,ஏனோ இப்படியே வாழ்க்கை நகர்கிறது,,,
முருகன் நல்ல வேலைக்கு செல்கிறான், சேலத்தில் பணிபுரிய செல்கிறான்,, குமார் தன தொழிலில் மேன்மை அடைகிறான்,,,, முதல் பையனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்,,மனைவி வந்தவுடன் அவன் ஆட்டம் இன்னும் அதிகமாகிறது,,, இந்நிலையில் இவர்கள் தனிக்குடித்தனம் செல்கிறார்கள்,,,,,,,,
குமார் தன வேலை நிமித்தமாக வெளியூர் சென்று பணிபுரிய செல்கிறான்,,,,,, அங்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அடுத்த பாகத்தில் பார்க்கலாம்,,,,,,

எழுதியவர் : ஸ்ரீஜே (13-Dec-17, 5:12 pm)
பார்வை : 84

மேலே