ஏதோ மயக்கம்

ஏனோ! எனை காதல் செய்தாய்
சொல்லடி...
இன்றோ!! என் வாழ்வே உந்தன்
சொல்படி ....

நீ போடும் காதல் கோலங்களை காகிதக்கிறுக்கல்களாக
மாற்றிடுவேன் !!
நீ பேசும் மௌனராகங்களை பெண்மை கீதமென்று
உரைத்திடுவேன்!!!

நாம் நடக்கையில் பாதைகள் நீண்டிடவே வரமொன்று
கேட்டிடுவேன்!!
அடியே நம் காதல் அதிகரிக்க உன்மீது பொய்யாய் கோபம்
கொண்டிடுவேன்!!!

பூக்களை தேனீக்கள் சுற்றுவது போல
என் கால்களோ உன்னையே சுற்றுகிறது
உயிரின் பொட்டான இதயம் போல
உன் நெற்றில் பொட்டிட மனமோ குதிக்கிறது

உந்தன் கூந்தல் சரிந்து விழும் அழகினிலே
என் கண்ணாடி கண்கள் சில்லுவாய் உடையுதடி
எந்தன் அருகில் நீயும் வர உன் மூச்சுக்காற்றும் என்மேல் பட
என் நாளே பல வண்ணங்களில் மிளிருதடி

இலையுதிர்க்காலம் போல் நானும் இருக்கமாட்டேன்
நம்மிடையில் இடைவெளி ஒன்றை கொடுக்கமாட்டேன்
இரு உயிரும் இல்லை இருந்தும் பரவாயில்லை
உனக்கென என் உயிர் தர ஒரு பயமுமில்லை

நொடிச்சத்தையும் கவனிக்க செய்தவள்
நீரோ !!
தினம்தினம் பவனிவரும் காதல்
தேரோ !!!

18 வயது பட்டாம்ப்பூச்சி காதல் காற்றில் பறக்கிறதே
பெண்பாவை மலரில் தேன் எடுக்கிறதே
உடம்மெல்லாம் ஆசை சுரப்பி தானை சுக்கிறதே
நீ கொடுத்த ஒரு முத்தம் ஆசைதாகத்தை தனிக்கிறதே

எனை உனக்கு பிடிக்காதென்று சொல்லிப்பார்
என் மனோமோ வலியால் தவிக்குமடி
அதே !பிடிக்குமென்று சொல்கையில் என் உதடுகளோ
உன்கன்னத்தில் பல முத்தங்களை குவிக்குமடி

நீ என்னை ஆள,,நான் பிறந்தவன் போல ,,,
இனிக்குமே
உன் கழுத்தினில் மாலை ,,நான் சூட்டும் வேளை
நடக்குமே

நீ தானே! தீ தானே!!
பொய்தானே ?? மெய்தானே !!!

-கிருஷ் அரி

எழுதியவர் : கிருஷ் அரி (16-Dec-17, 2:32 pm)
சேர்த்தது : கிருஷ் அரி
Tanglish : yetho mayakkam
பார்வை : 71

புதிய படைப்புகள்

மேலே