இரட்டைக் கிளவி

தலையதலைய பட்டுடுத்தி
வெடுவெடுன்னு போறவளே
படபடன்னு பேசும் போது
சறுகாக வெந்தேனடி..

துருதுருன்னு கண்ணால
மாஞ்சிமாஞ்சி பார்த்தவளே
மளமளன்னு கோவிக்கும் போது
மச்சான் மனம் நொந்ததடி..

மொழுமொழுன்னு கால்மேல
கலகலன்னு கால் கொலுசும்
பளபளன்னு மின்னும் போது
பாவி உள்ளம் ஏங்குதடி..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (28-Dec-17, 7:33 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 87

மேலே