முகராசி

எனக்கு எல்லாம் தேடி வரும்;
வெற்றி எனை நாடி வரும்;
மனதில் மயில் தோகை ஆடி வரும்;
காதில் குயில் சங்கீதம் பாடி வரும்;
நதி நீர் எனை நோக்கி ஓடி வரும்;
என் குடிசை மாறி மாடி வரும்;
கொஞ்சம் கொஞ்சமாக பணம் கோடி வரும்;
பாடும் பாட்டு ராகத்தில் தோடி வரும்;
இவை எல்லாம் எதனால்?
நீ என் இணையாகி தினமும் காலையில் உன் முகம் பார்ப்பதால்;
நீ இல்லை என்றால் என் முகத்தில் தாடி வரும்;
என் உயிர் எனும் பயிர் வாடி விடும்🌿
காலன் படை தேடி வரும்:
உன் முகம் பார்த்து கொண்டே என்
அகம் மகிழ வேண்டும்🌼🎆♥♥♥

எழுதியவர் : பாலமுருகன் பாபு (4-Feb-18, 7:35 am)
பார்வை : 178

மேலே