தமிழ் தான் எம் மொழி

அய்யன் வரிகள்
அழியாது வரை
மார் தட்டி கொள்ள
மருளுவது ஏன்

கீழ் கணக்கும்
மேல் கணக்கும் உள்ளவரை
மனதயக்கம் வேண்டாம்
மார் தட்டி கொள்ள

தாய் பாலும் தமிழ் பாலும்
குடித்து உரமேறி உள்ளது
என் மார்பு தமிழன் என்று தட்டி கொள்ளவே

தொலைபேசி கொஞ்சம் தொலைத்து
வாருங்கள் திரண்டு கிடக்கும்
தமிழ் பால் பருக ........

எழுதியவர் : VRamakrishnan (10-Feb-18, 2:03 am)
பார்வை : 692

மேலே