இராமகிருஷ்ணன் வெ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராமகிருஷ்ணன் வெ
இடம்:  கிருஷ்ணகிரி
பிறந்த தேதி :  13-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-May-2015
பார்த்தவர்கள்:  588
புள்ளி:  34

என்னைப் பற்றி...

கவி ஒன்று படைத்திடவே தூரிகை சுமந்து திறிகிறேன் . பிரமன் முதல் கவிஞன் வரை படைப்புகள் எல்லாம் ரசிக்கிறேன் .எம் ரசிப்பை எம்மோர் இதயத்தில் இடம்பெற செய்து .புதிய ஓர் ஞாலம் புத்துயிர் கொண்டு அறம் தாங்கி நின்றிடவே கனா ஒன்று காண்கிறேன் .

என் படைப்புகள்
இராமகிருஷ்ணன் வெ செய்திகள்
இராமகிருஷ்ணன் வெ - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 9:39 pm

உன்னிடம் பேச நினைக்கிறன்
என்னால் முடிய வில்லை
எங்கே நீ என்னை நிராகரித்து விடுவாயோ என்று .

படைப்பு
ரவி .சு

மேலும்

நன்றி கவனிக்க வில்லை 16-May-2018 7:46 am
நிராகாது -நிராகரித்து 15-May-2018 10:36 pm
இராமகிருஷ்ணன் வெ - இராமகிருஷ்ணன் வெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2018 11:05 pm

காமத்தின் இச்சையை
மிச்சமாக்கியவளும்

கள்ளி பாலை
கையில் ஏந்தி நின்றவளும்

கள்ள காதலுக்காக
கழுத்தை அறுத்தவளும்

குப்பை தொட்டியை
தொட்டிலக்கியவளும்

உயிரோடு உள்ளவரை

அன்னையர் தின வாழ்த்து
அனைவருக்கும் உரித்தாகாது

அன்னையாய் வாழும் அன்னையருக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்

மேலும்

இராமகிருஷ்ணன் வெ - இராமகிருஷ்ணன் வெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2018 11:29 pm

அன்னை

அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்

என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்

மேலும்

இராமகிருஷ்ணன் வெ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2018 11:29 pm

அன்னை

அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்

என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்

மேலும்

இராமகிருஷ்ணன் வெ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2018 11:05 pm

காமத்தின் இச்சையை
மிச்சமாக்கியவளும்

கள்ளி பாலை
கையில் ஏந்தி நின்றவளும்

கள்ள காதலுக்காக
கழுத்தை அறுத்தவளும்

குப்பை தொட்டியை
தொட்டிலக்கியவளும்

உயிரோடு உள்ளவரை

அன்னையர் தின வாழ்த்து
அனைவருக்கும் உரித்தாகாது

அன்னையாய் வாழும் அன்னையருக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்

மேலும்

இராமகிருஷ்ணன் வெ - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 3:28 pm

வறண்ட காலத்தில்
மரங்கள் நிச்சயம்
தன் இலையை இழக்கும் !
ஆனால்...,
அது தன் வேரை இழக்காது !
தமிழா ! இன்று ..,
நீதான் மரம்
இது வறண்ட காலம் .,
எதை இழப்பாய் !?...
வேரையா..?! இலையையா...?!
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் .
இலையை இழ..!!
-துளிர்த்துக்கொள்வாய் !.

கேளிக்கையால் ,
வேடிக்கையால் ,
முட்டாளானது போதும் !.
உதிர்த்துவிடு இதுபோன்ற இலைகளை.,
உயர்த்திப்பிடி உனக்கான கொள்கைகளை.
-கங்கைமணி

மேலும்

வணக்கம் ஐயா ! என் மனதிற்குள் குமுறிக்கொண்டிருக்கும் சில கேள்விகளில் இதுவும் ஓன்று.நான் ஒரு கவிஞன் ?..என்னால் என்ன செய்துவிடமுடியும் என்ற சிந்தனை மட்டுப்படுத்துகிறது என்னை.என்னால் எனது வரிகளில் வலிமைக்கூட்டி அள்ளி ஏறியமுடியும் நிச்சயம்,அது கவிதைகளாக இருக்கலாம் அல்லது பாடலாகக்கூட இருக்கலாம் . அது நாம் இழந்தது,இழக்கப்போவது என்று பலவற்றை எடுத்துரைக்கும்.அதனால் விமர்சனத்திற்கு உள்ளானாலும் களங்கப்போவதில்லை.நான் பிறந்த இனத்திற்கு ஏதாவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும் அவ்வளவுதான். இயற்கையாகவே தமிழனுக்கு கலைகள் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம் அதைவைத்துக்கொண்டு ஆட்சிநடத்துவதுதான் வேதனை.இந்நிலை மாறவேண்டும்.,என் இனம் இன்று யோசிக்கமுயற்சித்திருக்கிறது இது ஒரு சிறந்த மாற்றத்தின் தொடக்கம்.நன்றி ஐயா 13-Apr-2018 11:05 pm
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் . இலையை இழ..!! -துளிர்த்துக்கொள்வாய் !. -----அருமை வரிகள் படம் சிம்பாலிஸம் அருமை . இது இல்லாவிடினும் கிரிக்கெட் எல்லை கடந்த வியாபாரமாகமும் ஏலமாகவும் ஆகிவிட்டது . மற்ற பொழுது போக்குகள் சினிமா டிராமா தொலைகாட்சி களுக்கும் காவிரிக்கும் எந்த தொடர்பும் இல்லையா ? அதில் ஆனந்தித்து இருக்கலாமா ? அதிலும் அமர்ந்து அமர்ந்து அலசி ஆனந்திக்கிறார்களே செய்தியாளர்கள் ! ஒவ்வொரு நாளும் இவர்களெல்லாம் சிம்பாலிக்காக சில மணி நேரம் நிகழ்ச்சிகளை ஏன் மூடி வைக்கக் கூடாது? 13-Apr-2018 8:17 am
தங்களின் கர்த்து முற்றிலும் உண்மை நண்பா என்னசெய்ய.காலம்தான் பதில்சொல்லவேண்டும் .மிக்க நன்றி 13-Apr-2018 12:55 am
மிக்க நன்றி ஐயா !!. 13-Apr-2018 12:53 am
மணிசோமனா ஜெயமுருகன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Mar-2018 10:06 pm

ஆசை...


உன் காதல் சூட்டில்
கரைந்திட ஆசை...

உன் மூச்சுக்காற்றில்
உறைந்திட ஆசை...

நீ பேசும் பேச்சில்
நிறைந்திட ஆசை...

நீ நீங்கி போனால்...
இறந்திட ஆசை.....

மேலும்

அவளின்றி நானில்லை என்பது போல் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 9:39 am
ஆசைகள் ஏராளம்... காதலில் பருக பருக திகட்டாத அமிர்தம் ஆசைகள்! வாழ்த்துகள் 31-Mar-2018 7:36 am
இராமகிருஷ்ணன் வெ - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2018 9:52 am

தட்டி கேட்காத தகப்பன் வேண்டும்
சொன்னதை கேட்கும் மகன் வேண்டும்

எல்லாம் பேசும் காதலி வேண்டும்
எதிர்த்து பேசா மனைவி வேண்டும்

கேட்டதை கொடுக்கும் அம்மா வேண்டும்
கேட்காமல் செல்லும் மக்கள் வேண்டும்

இடித்துரைக்கா நண்பன் வேண்டும்
எதை சொன்னாலும் ஏற்கும் உறவு வேண்டும்

நேரம் கேட்கா முதலாளி வேண்டும்
உரிமை கேட்கா தொழிலாளி வேண்டும்

கேள்வி கேட்கா ஆசீரியர் வேண்டும்
சந்தேகம் கேட்கா மாணவன் வேண்டும்

அல்லி தரும் அரசன் வேண்டும்
கொள்கை கேட்கா தொண்டன் வேண்டும்

நோய் இதுவென கேட்கா நோயாளி வேண்டும்
பணமே கேட்கா மருத்துவர் வேண்டும்

கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால்
வாழ்வே வா

மேலும்

இராமகிருஷ்ணன் வெ - ஸ்ரீதர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2018 8:02 pm

தயார்படுத்திக்கொள்
உன் கால்களை
நீ பிறந்தபோதே
தயாராகிவிட்டது
உனக்கான பயணம்!

வாழ்க்கை
எனும் பயணத்தை
வலிமையோடு கடந்திடு
வலியெல்லாம் மறந்திடு

உன்னை
தனிமைப்படுத்திக்கொள்
அது சொல்லும்
உன்னையும்,
உலகையும்.

விழிப்போடு இரு
உனக்கான பயணம்,
வழித்துணை தேடாதே

மயக்கம் வேண்டாம்
எதிலும்,
தயக்கம் வேண்டாம்
எதனாலும்.

தவறுகள் கண்டு
தளராதே,
எதிரிகள் கண்டு
மிரளதே.

உனக்கு நீயே
உற்ற நண்பன்!
உன்னிப்பாய் கவனி
உனக்கு நீயே
எதிரி!

கனவுகளோடு மட்டும்
கரையேறாதே,
வரலாற்றில்
கனவுகள்
காணாமல் போகும்.

இந்தநொடி
உனக்கானது
காலம் தாழ்த்ததே
தொடங்கிடு

மேலும்

உரம் 02-Mar-2018 10:08 pm
அருமை நண்பா.... 02-Mar-2018 8:36 pm
நன்றி. தட்டச்சு சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம் நிச்சயம் நிறுத்திக்கொள்கிறேன். 02-Mar-2018 8:26 pm
நன்றி. தட்டச்சு சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம் நிச்சயம் நிறுத்திக்கொள்கிறேன். 02-Mar-2018 8:25 pm
இராமகிருஷ்ணன் வெ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 5:32 am

என் தனிமை
பார்ப்பவருக்கு இனிமை

தகவல் தொழில் நுட்ப பணியாளர் .....
நடிகர் .......

மேலும்

இராமகிருஷ்ணன் வெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்

மேலும்

தமிழன் நாடாளும் நாள் தமிழினம் (DivyaPrakash56) முதல் பரிசு 30-Oct-2018 11:14 am
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா அதை எங்கு காண 20-Mar-2018 4:38 pm
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா ? 17-Mar-2018 4:58 pm
போட்டியில் எப்படி கவிதையை சேர்ப்பது? 15-Mar-2018 9:21 am
ச செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2018 8:25 am

எத்திசை நோக்கின் நின்
முகம் கண்டேன்!
யென் கற்பனை ஓவியம் கண்முன்னே
உலாவக் கண்டேன்!
யென் சிந்தை யெலாம் பரந்து
விரிந்தோடும் நதி நீயெனக் கண்டேன்!

என்று தீரும் யென் ஐயம்!-இது
கார்முகில் கூந்தல் அலங்கரித்த
மலைமகளோ! - இல்லை
நீல வானிலே உலா வரும்
பிறைமக ளென்று!

நின்னைப் படைத்தவன்- ஓர்
விந்தைக் காரன் இல்லையேல்
யென்னைப் பித்தனாக்கி- உன்
பின்னே அலைய விட்டிருப்பானோ!

உதிரம் சிந்தாமல் கூரிடாமல்
இதயத்தை களவாடிச் செல்லும்
என்னோ விந்தையடி- உன்
கண்களுக்கு!

கவி மறைந்தான் இயற்கைப்
பேரழகி மாண்டதால் - இங்கே
நான் மாண்டுறுகிறேன் நொடியெல்லாம்
நின்னிடத்தில் காதலை உரைக்க முடியாமல்!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே! 09-Mar-2018 9:30 am
தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே! 09-Mar-2018 9:30 am
அழகு நட்பே..... 04-Mar-2018 6:40 pm
கண் முன் காண்பதெல்லாம் அவளாக இருத்தலும் அது உன்மையாக இருப்பதில்லை. நாம் செல்லாமலே இருந்தாலும் அது காதலாகி விடுகிறது. நம் மனதில் என்றும் ஒருதலை காதலாக.. அருமையாக உள்ளது தோழரே. வாழ்த்துக்கள் 04-Mar-2018 12:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்
P Rem O

P Rem O

ஒட்டன்சத்திரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (36)

தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே