வஞ்சகர்கள் நாம் =================

விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டு நாமும்
=விளைவிக்கும் கதிரியக்கம் விரிவாவ தாலே
அஞ்சாமல் பறவைகள் அமர்கின்றக் கிளைமேல்
=அதிர்வலைகள் ஏற்படுத்தி ஆபத்தை செய்தோம்
கொஞ்சாமல் கொஞ்சிவதால் கூட்டுக்குள் முட்டை
=கமுக்கமாக இடுவதனை கூண்டோடு அழிக்கும்
வஞ்சங்கள் புரிகின்ற வர்க்கங்க லாகி
=வண்ணவண்ண பறவையின வம்சத்தைத் தொலைத்தோம்!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Feb-18, 3:56 pm)
பார்வை : 85

மேலே