பின்னர் என்பது இல்லை

மெல்லிய குரைத்தலில்
விழுந்தது உறக்கம்.
விழித்தும் இருள்தான்.
குப்பென்று கிடந்த
தனிமையின் குடலில்
தவழ்ந்திருக்கும்
சொப்பன பயம்
எழ விடாது அழுத்தின.
ஊறிப்போயிருந்த குரல்
பூனையின் அலறலில்
நொறுங்கிச் சிதறி
சாம்பலாய் மிதந்தது.
விடிவதற்கு இன்னும்
நேரமாகலாம்...
கைவிரல் நகங்கள்
வளரத் துவங்கின,
கால் வரையிலும்...

எழுதியவர் : ஸ்பரிசன் (3-Mar-18, 5:11 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 202

மேலே