திருடத் தெரிந்தவனுக்கு
தேடி எடுத்துவந்து
தேனைச் சேமிக்கத் தெரிகிறது,
தேனீக்கு..
கொடுக்கும் இடைஞ்சலுக்குக்
கொட்டி விரட்டிட
கொடுக்கிருக்கிறது அதனிடம்..
அதனையும் மீறி,
தேனைத் திருடிடத்
திறமை இருக்கிறது-
மனிதனிடம்..
கலங்குவதில்லை தேனீ,
தெரியும் அதற்கு-
திருடத்தெரிந்த மனிதனுக்குத்
தெரியாது-
தேனை உருவாக்க...!