கணவாளனே

இறுதி வரை காத்திருப்பேன் என்றாய்.............
அந்த நம்பிக்கையில் தானே நானும் வெறுத்து (நடித்து)போனேன்.........
என்னக்காக எல்லாம் மாற்றுவேன் என்றாய்...
நீயே மாறிப்போனது ஏனோ.......
நான் கொடுத்த வலிகளை எல்லாம் திருப்பி கொடுத்து விட்டாய்.........
நீ கொடுத்த அன்பை எல்லாம் எப்பொழுது வாங்குவாய்.....
கொடுக்க காத்திருக்கிறேன்,,,,,,,அன்று உன்னை போல்......
உன் நினைவுகள் எல்லாம் காற்றை......
கை நீட்டி பிடிக்க நினைக்கும் போது கரைகிறது......கண்ணீர்துளிகளில்..........
ஆசையை விதை ஊன்றி தண்ணீர்விட்டாய்........
என்னுள் மரமாகும் முன்னே இப்படி
வெட்டி எறிகிறாயே ......
இது நியாயமா............
நான் எது செய்தாலும் நீயும் செய்வேன் என்றாய்........அன்று...
நான்பொய்யாக தானே வெறுத்தேன்........நீ என் உண்மையாக......
ரொம்ப வலிக்கிறது..........நீ என்னை மறந்தாய் என்பதற்க்காக இல்லை.....
இந்த வலிகளை தானே ...நானும் உனக்கு கொடுத்திருக்கிறேன்.........என்று....

எழுதியவர் : ரேஷ்மா. (9-Mar-18, 4:04 pm)
பார்வை : 273

மேலே