முள் மஞ்சம்

பசியில் தான்
மனிதனின் அசல்
குணம் வெளிப்படுகிறது

இறையருள் வேண்டி
தவம் செய்ய சென்றேன்
அங்கே இறைவனும்
தவம் செய்து கொண்டிருந்தான்

மனிதனின்
ஆதியும் மண்ணில்
அந்தமும் மண்ணில்
இடையில் அத்தரும்
ஜவ்வாதும்
பூசிக்கொள்கிறான்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Mar-18, 11:52 pm)
Tanglish : mul manjam
பார்வை : 74

மேலே