புதியதோர் படை புதியதோர் விடியல்

புதியதோர் படை கிளம்புது பார்!
புதிய விடியலை உருவாக்க விதைக்குது பார்!
தடைகளை யுடைத் தெறிந்து முன்னேறுவதைப் பார்!
அதன் கரங்களை வெற்றி நோக்கி இணைப்பதைப் பார்!
மௌனமாக முகநூலில் பயிற்சி செய்வதைப் பார்!
நாளை விண்ணைமுட்ட கேள்வி முழக்கமிட
வீதி யுலா வரும் பார்!
பல்லாண்டு அடிமைப்பட்ட கூட்ட மொன்று
வீறெழுந்து புதுவெள்ள மெனபாய்வதைப் பார்!
அவ்வெள்ளத்திலே குள்ளநரி கூட்டமெல்லாம்
அஞ்சி யஞ்சி நடுங்கியோட வரும் காலத்தினைப் பார்!
ஆங்காங்கே தவறும திகாரத்தை யெதிர்ப்பதை பார்!
அவற்றில் சில ஒன்று எரிமலையாய் வெடிப்பதைப் பார்!
அரசுத் திட்டங்களின் முகத்திரையை கிளிப்பதை பார்!
இருட்டில் திட்டம் போடும் பொய்க் கணக்கை
தீப்பொறியாய் வெட்ட வெளிச்ச மாக்குவதைப் பார்!
அறியாமை வறுமையிலே வாடி நின்ற பயிர்க ளெல்லாம்
கல்விச் சாலையிலே அறிவைத் தீட்டுவதைப் பார்!
அது தேசமெங்கும் அறிவில் தாமரை மலராய் நறுமணம் வீசுவதைப் பார்!
அடக்கி யாளும் கூட்டத்தினை
மிதித்திடவே
இளம் காளையர்கள் வீறெழுந்து நடைபோடுவதைப் பார்!
சாதி, மதம், இனம் யென பிரித்தாளும் சக்திகளை
பொசுக்கிடவே காட்டுத் தீயென மனிதநேயம் பரவுவதைப் பார்!
புதியதோர் படை கிளம்புது பார்!
புதிய விடியலை உருவாக்க விதைக்குது பார்!

அன்புடன்
ச. செந்தில் குமார்

எழுதியவர் : ச. செந்தில் குமார் (17-Mar-18, 4:34 pm)
பார்வை : 909

மேலே