அடுப்பின் அறையில் நீ செய்யும் தியாகங்கள்

கனிந்த கைகள் காய்க்கிறது
காயங்கள் ஏற்கிறது ,
அறுசுவை ஆக்குகிறாள்
இவள் சுமை பாராமல்,

நாவினில் நனைந்த உணவு
நவமணிகள் கோர்த்த குழைவு,,
நித்தமும் நன்றி பாடுவேன்
காய்த்த கைகளை கனியாக்கிட.

எழுதியவர் : திலீபன் சுந்தர் (15-Apr-18, 9:48 pm)
சேர்த்தது : திலீபன் சுந்தர்
பார்வை : 121

மேலே