எனை நனைத்த மழை
எனை நனைத்த மழை" யே
எனக்கொரு பயனுமில்லை
விதைத்த வித்து முளைக்க
விவசாயி உயிர் மிஞ்சுமே
எனை நனைத்த மழை யால்
என் தாகம் தீராது ஆயினும்
நெருப்பு அனைய உதவும்
அதிலும் உளது நன்மைகள்
சிகரத்தில் உருவாகும் நதி
சமுத்திரத்தை போய்ச்சேர
எத்தனை தூரம் என்று
யாரையும் கேட்பதில்லை
உன்னால் முடியுமென
முன்னால் சொன்னாலதை
தன்னால் முடியும் என்று
என்னால் உணர முடியாது
மனம் குன்றிப்போகையில்
தன்னம்பிக்கை ஒன்றே
"எனை நனைத்த மழை"
என வெற்றி கண்டேன்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
எனை நனைத்த மழை:
கவிதைமணியில்