குயிலே குயிலே குயிலக்கா
குயிலே குயிலே குயிலக்கா.
கூ கூ கூ என கூவி.
கூக்குரல் போட்டு .
நீ என்னை அழைத்தது தான் ஏனோ.
ஊரெல்லாம் வாழும்.
சோலை குயில்கள் நாங்கள்
சோகமின்றி பாட்டு பாடுகின்றோம்
ஆவலுடன் இளசுகள் யாரும் .
திரும்பி பார்க்கலையே சின்னக்கண்ணு.
குயிலே நீயோ
எத்தனையோ காவியத்தில்.
அழகாக அளவெடுத்து
எடுப்பாக இருந்தாயே.
காலம்மாறி போகையில .
நலிஞ்சு போயிட்டியே என எண்ணத் தோன்றுதடி.
..
கவசம் தரும் இயற்கையை .
காக்கின்ற கடவுளின் பண்புகளும்.
காணாமல் போனதால்.
தேய்ந்து போகுமோ என் இனம்.
போற்றிட யாருமில்லை.
இனி என் செய்வோம்.
நாகரீகம் வளர வளர
நற்பண்புகளும் காணாமல் போவதால்.
சொந்தமென உறவு கொள்ளும் .
தன்மையும் இன்றதனை காணவில்லை.
எங்கேதான் போனதுவோ.
எனக்கும் தெரியலையே
சின்னக் குயிலே.