என்று

இருமனம் உருகுவதால்
வருவது காதல்
சாதி, மதங்களால் என்றும் இல்லை
காதலுக்கு சாதல்

காதலுக்கு காதலர்கள் மீது
என்றும் இருக்கும் நாடல்
என்றும் இல்லை
காதலில் ஊடல்

எப்பொழுது முடியும்
எனக்கனவளுக்கான தேடல்
இப்பொழுதே எழுதி விட்டேன்
அவளுக்கென ஒரு மடல்

அதை அவளிடம் கொடுக்க
கடப்பேன் ஆயிரம் கடல்
அவளுக்காகவே வாழ்கிறேன்
நானும் பூமியில்

தினமும் வருகிறாள்
அவள் என் கனவில்
அவளையும், என்னையும்
என்று ஒன்று சேர்க்கும் இந்த காதல்.

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 4:26 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : enru
பார்வை : 421

மேலே