பிச்சைக்காரன்

படி அரிசி சேர்க்க பல படிகள்
ஏறி இறங்கி சோர்ந்தேன்
சில அடிகள் நடக்க முடியாது
கல்லடி பட்டு இடம் சேர்ந்தேன்,
முகம் அழகு லட்சணமாக
இருந்தும் ஈகை குணமின்றி
மனம் அவ லட்சணமாக
இருக்க கண்டேன்,
முகத்தின் அழகில் விள்ளல்
இருந்தாலும் வளைக்கரம்
வள்ளலாக இருப்பதையும்
கண்டேன்,
ஒரு வேளை சோறின்றி நான் தவிக்க பல வேளை சோறு பாத்திரம் துலக்கும் இடத்தில் விரவிக்கிடக்க கண்டு விரக்தி கொண்டேன்,
இறைவா, இந்த பூமியைத்தான் மலையும் மடுவுமாய் படைத்தாய்,
மனித மனங்களையும்
வாழ்க்கையையும் ஏனோ
அவ்வாறே படைத்தாய்?

எழுதியவர் : பாலமுருகன் பாபு (3-Aug-18, 11:14 am)
Tanglish : pichaikkaran
பார்வை : 95

மேலே