சொல்லாத காதல்

உன்னிடம் சொல்லாத காதலெல்லாம் திறக்காத கவிதைகள்போல் மௌனத்திலே மாண்டதடி...
உன்னிடம் பேசாத வார்த்தைகளெல்லாம் பொருளின்றி புதைந்த வேதங்களாயின...
அவளிடம் கழிக்காத நேரமெல்லாம்
இசைக்காத மூங்கிலாய் மௌனித்தன...
உன்னிதழ் சுவைக்காத முத்தங்கள்
நான் இழந்த ஆனந்த பக்கங்கள்...
உன்மடிமீது நான் துயிலாத துயில்களெல்லாம் நான் ரசிக்காத
இசை கூறுகளாயின...
உன் உடலுக்கு உயிராகாத என் உடலோ
மண்ணுக்குள் தளிராத விதைபோல்...
நான் இத்தனையும் இழந்தாலும்....அவளுடன் நான்கண்ட கனவுகள் மண்ணுக்குள் புதைந்த என் வாழ்வின் துளிர்விட்ட பசும் தளிர்களாயின.....என்னவளுக்கு ....இது....நானும்..என்கவியும்.

எழுதியவர் : செல்லப்பாண்டி (16-Aug-18, 5:35 pm)
சேர்த்தது : Chellapandi
Tanglish : sollatha kaadhal
பார்வை : 370

மேலே