இதயத்தின் இதயத்திற்கு

என் இதயமே,
தெளிந்த பகல் வானில்
தெரியாத வெண்ணிலைவாய்
நானிருந்த போதும்..........
என் பெண்ணிலவு
உன் நினைவில் தான் கடந்து வந்தேன்
தனிமை கடல் யாவும்!

எனது தேடலின் பாதை - ஏனோ
தோல்வி களைப்பில்
முட்டுச்சந்தில் மோதி நின்றபோதெல்லாம்
நான் இளைப்பாற இடம் தந்தது
என் இனியவள்
உனதிரு இமைகள் தானே!

உனக்காய் என்னிடம்
கவிதை கேட்கும் கவிதையே!
ஒவ்வொரு முறையும் மொழிமறந்து
மௌனமாகிறது எனது எழுதுகோல்!
உன் கயல்விழி அழகிலோ
மதிமுக அழிகிலோ - அல்ல
கருவறையிலிருந்து தன்னை இம்சிக்கும்
சதை பிண்டத்தை நேசிக்கும்
தாயாய்........
நீ தரும் அன்பில்!

எழுதியவர் : சோட்டு வேதா (27-Aug-18, 3:18 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 576

மேலே