நாய்க்குட்டி

கொட்டும் மழையிலும் கண்ணீர் சிந்துவாரோ
கடவுளும் எனக்கு...
என்னை கடந்து
விரைந்து போகும் மக்கள்
போகிற போக்கில் ரொட்டித்துண்டை
போடுகிற அவர்களின் பாசமும் இல்லையோ
முகம் தெரியாது போன
என் தாய் தந்தைக்கு ....
வீட்டு வாசலில் ஏங்கிநிற்கிறேன்
அம்மா குழந்தைக்கு சோறூட்டுகையில்...
சோருக்காக அல்ல ...
அம்மாவிற்காக ......

எழுதியவர் : ரேஷ்மா (29-Aug-18, 11:43 am)
Tanglish : naaikutti
பார்வை : 456

மேலே