ரகசியம் 3

தன் பெரியப்பா
வீட்டிற்கு சேர்ந்த அன்பு.
அவர் செய்ததை கண்டு குழப்பம் ஆனான்...
அவர் அன்பை இழுத்ததும்.....கதவை தாழ்இட்டதும்அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது....
தன் பெரியப்பாவை நீண்ட நாள் கழித்து சந்திப்பதால் அதை பற்றி கேட்காமல் ஆரத்தழுவி பெரியப்பா எப்படி இருக்கிறீர்கள்? எத்தனை நாள் ஆச்சு உங்களை பார்த்து ....
எங்கே பெரியம்மா?
தங்கை நித்யா? எல்லாம் எங்கே பெரியப்பா...என அன்பு
கேட்க... எல்லாரும் தூங்கராங்க...நீ வா வா...போய் சாப்புடலாம்.பெரியம்மாக்கு
உடல்நிலை சரியில்லா அதுதான் தூங்கிடா....நித்தியா இவ்வளவு நேரம் காத்திருந்து இப்போது தான் தூங்கினாள் என்றார்...
ஓஓஓஓ!!அப்படியா சரி எனக்கும் பசிக்குது..கை, கால்களை கழுவிட்டு
வந்து சாப்பிட உட்கார்ந்தான்..பெரியப்பா பரிமாற சாப்பிட்டு களைப்புடன் உறங்க தன் மெத்தைக்கு சென்றான்...பெரியப்பா காலை பார்ப்போம்..என்று கூறி
அவரும் உறங்க சென்றார்.....
புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை...
புரண்டு புரண்டு படுத்து அன்பு யோசிக்க ஆரம்பித்தான்...என்ன இது காலையில்இந்த ஊர் ஒன்றாகவும்...மாலையில் ஒருவித நிலையும்இருக்கிறது என்று... யோசிக்க ஆரம்பித்தான்...

யோசித்து கொண்டே சன்னல் ஓரம்
நடக்க நடக்க திடீரென சத்தம் கேட்டது.சன்னலை திறக்க முயன்றான்.ஆனால் திறக்க மூடிய வில்லை.... ஆணியால் அடைக்கப்பட்டு இருந்தது...குடு குடு வென்று என்று வெளியே வர வீட்டின் கதவும்
சாவி கொண்டு பூட்ட பட்டு இருந்தது..
குழப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஒன்றும் செய்ய மூடியாது . படுக்கைக்கு
திரும்பினான் அன்பு..

எழுதியவர் : உமா மணி படைப்பு (11-Sep-18, 2:45 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 121

மேலே