நதிகள் ஆயிரம் மூழ்கி என்ன

நதிகள் ஆயிரம் மூழ்கி என்ன
நாமங்கள் கோடி எழுதியென்ன
குணக் கோயில் வாசல் கதவினை மூடிவிட்டு
கும்பிட்டு தெண்டலிட்டுப் பயன் என்ன ?

குன்றுகள் தோறும் ஏறி வணங்கி என்ன
குளங்களில் எல்லாம் முங்கி நீராடி என்ன
அன்பெனும் அகவாசல் கதவினை மூடிவிட்டு
ஆராதனை பாராயணத்தில் பயன் என்ன ?

ஊர் ஊராய் சுற்றுலா போயென்ன
ஊர்கள் கோவிலெல்லாம் வலம் வந்தென்ன
உள்ளத்தின் கோவிலில் அன்பு விளக்கேற்றாது
உன் கிண்கிணி பசனையின் பயன் என்ன ?

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-18, 8:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே