மனதைவிட்டு அகலாது

பண்போடு உறவாடிய
பண்டைய முன்னோர்கள்
நலிவுற்று வாழ்ந்ததால்
நடைபயணம் மக்களுடன்
நட்பாகி நலம் காத்தது

கோடையில் ஆதவனின்
கொடூரப் பார்வையால்
சிறைபட்ட மக்கள்
சோர்வடையக் காரணம்
வசதியில்லாததும் தான்

தாகம் தணியாம
தேகம் கண்ணீர் சிந்த
துயர் துடைக்க வந்த
தண்ணீர் பந்தல், சத்திரங்கள்
சரித்திரம் படைத்தன

ஆற்று மணலில்
வீற்றிருக்கும் மண்பானை
மோரும், நீரும் தந்து
மக்களைக் காத்து
மகிழ்ந்தது

கோடை வெய்யிலின்
கொட்டத்தை அடக்கி
மன நிறைவு தந்த
மண்பானை—என்றும்
மனதைவிட்டு அகலாது

எழுதியவர் : கோ. கணபதி. (14-Oct-18, 5:22 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 52

மேலே