“மலடி”யின் மகன்

எத்தினி நா(ன்)மறுத்தும்
ஒத்தைமனம் நோகுமுன்னு
செத்தவு(ம்) நெனைக்காம,
மெத்தப் படிச்ச அப்பன்
வித்தகமாக் குளிசையத
மெத்தனமாக் கலந்துதர,
எத்தினிநாள் கண்டகனா
சத்தமின்றிக் க(ரை)லைஞ்சுவிட;

பித்துப் பிடிச்சவளாப்
பத்து மாதமென்ரை
சித்தத்திலை நாஞ்சுமந்து
சத்தமின்றி,வலியின்றிச்
சித்திரம் போலிப்புவிமேல
பெத்தெடுத்த
முத்து மகன்...
~ தமிழ்க்கிழவி (2010)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (19-Oct-18, 4:54 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 2894

மேலே