காதலின் முத்தம்
கருவிழிகள் சண்டையிட்டு மயங்கி,
சுவாசம் அடங்கித் தவித்து,
கரங்கள் தொட்டுத் தழுவப்பட்டு,
கால்கள் பின்னிப்பிணைந்து அடிமைப்பட்டு,
கொடியுடல் உலைந்து நிலைகுலைந்து,
உதடுகள் உருமாறிச் சளிந்து,
உமிழும் உயிர்த் திரவம் கலந்து,
உயிரினுள் உள்விளையாட்டு நடத்தி,
நினைவுகள் தடுமாறிக் கரைந்து,
நிலை மறந்து, உடல் தளர்ந்து,
உலகமே மறைந்த நிலை.
இப்படியே ஒரு காதல் முத்தம்
உறைகின்றது, உரைக்கின்றது.