ஏனோ சொல்ல நினைத்தது

ஏதோ சொல்ல நினைத்தேன்
ஆனால் நா எழவில்லை
கூறாமலும் இருக்க முடியவில்லை
என்ன தான் அது
ஏனோ குழம்பி தவிக்கிறேன்
குழப்பத்திற்கு என்ன தான் காரணமோ
புரியாமல் விழித்து விழித்து நொந்து தான் போனேனே
தெளிவு பிறக்கவே
ஒரு புது முயற்சி எடுத்தேனே
பல அடிகள் தாங்கினேன்
வளர்வேன்
என்றும் என் அடிமனதில் கொள்ளும் நம்பிக்கையுடன்
வலிகள் புது வழி பிறக்க என்று
கொண்டிடுவேன்
புது மெய்வழிச்சாலை கொண்டு

எழுதியவர் : பிரகதி (10-Nov-18, 12:26 am)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 456

மேலே