உதயமே வீறு கொண்டு எழுந்து வா

·
தினம் தினம் தன் ஜீவனை இழைத்து ....
தரணியின் மீது ஒளியை பூசும் ஆதவனே.....
அஸ்தமனம் ஆகவேண்டியவை அடம்பிடிக்கின்றன விட்டுவிலக.....
உன் சுடுகரத்தால் சற்று வன்மையாய் தீண்டு....
கசடிருள் ஒழிந்து ஒளி வெள்ளம் பாயட்டும்

மங்கியப் பார்வையில் தட்டித் தடுமாறும்
மக்கள் விழிபடர்ந்த புரைகள் நீங்கட்டும்
தொங்கிய தோளொடு துவண்டத்
தமிழினம்
துயரங்கள் தொலைத்து திண்மை பெற்றுத் திளைக்கட்டும்
வங்கக் கடலோரம் சங்கத் தமிழ் முழங்கட்டும்....


இதயங்கள் கோடி ஏங்கி தவிக்கின்றன
.உதயமே வீறு கொண்டு எழுந்து வா...!

எழுதியவர் : வை.அமுதா (12-Nov-18, 2:24 pm)
பார்வை : 35

மேலே