சாமான்யனின் சரித்திரம்

சாமான்யனின் சரித்திரம்

(நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி,பி.1774க்கு போவோம்)

லண்டன் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்றில் !.
“கிளைவ்” நீங்கள் இப்போது குணமாகிவிட்டீர்கள் உங்கள் மனைதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள். தயவு செய்து அமைதியாக இருங்கள். நீங்கள் அமைதியாகி விட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு அனுப்பி விடுவேன்.”டேக் ரெஸ்ட்” தோளில் தட்டிக்கொடுத்து விட்டு டாக்டர் அருகில் இருந்த அவர் மனைவி மார்கரெட் மஸ்கலீனிடமிருந்து விடை பெற்று அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்
.
கிளைவ் விரக்தியாய் புன்னகைத்தார் அமைதியாம் அமைதி அது எங்கு கிடைக்கும்? என்னை பற்றித்தான் இந்த மக்கள் கொள்ளை அடித்தவன் என்று பேசிக்கொள்கிறார்களே? நான் ஏதோ இவர்கள் சொத்தை கொள்ளை அடித்தது போல் பேசிக்கொள்கிறார்கள். இந்த பாராளுமன்றாவாதிகளுக்கும் வேறு வேலை என்ன? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை பற்றி குறை கூறுவது, மக்களிடம் என்னை பற்றி தப்பும் தவறுமாக சொல்லி என் பெயரை கெடுப்பது இதுதானே இவர்கள் வேலை! இவர்கள் இந்தியாவிற்கு போயிருக் கிறார்களா/ இங்கே உட்கார்ந்து இந்தியாவை பற்றி பேசுவார்கள், காட்டுவாசிகள், அங்கங்கே பாம்பும் பல்லியும்தான் இருக்கும், சாமியார்கள் தான் இருப்பர் என்று பேசி கொண்டிருப்பார்கள். போய் பார்க்க வேண்டியதுதானே,அங்கே உங்கள் சாம்ராஜ்யத்தையே நிறுவிய என்னை பார்த்து கண்டபடி பேசுவது. சே..என்ன வாழ்க்கை புலம்பியவாறு புரண்டு படுத்தார்.
அந்த மிகப்பெரிய பண்ணை வீட்டின் முன் நின்ற காரிலிருந்து கிளைவ் மெல்ல இறங்க, பின்னால் அவரை தாங்கி பிடித்தாவாறு மனைவி மார்கரெட்டும் இறங்கினாள். பின்னால் மகன்கள் எட்வர்டும், ராபர்ட்டும், மற்றும் கூட வந்தவர்கள் சிலரும் இறங்கி கிளைவ் அறைக்கு முன்புறம் நின்று கொண்டனர். கிளைவ்வை கூட்டி வந்த மார்கரெட் “கிளைவ்வை” கட்டிலில் படுக்க வைத்து விட்டு “ரிலாக்ஸ்” சொல்லிவிட்டு திரும்பியவளை “ப்ளீஸ்” என்னை விட்டு போய் விடாதே. அவள் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சலாய் பார்த்தார். ஓகே நீங்கள் தூங்குங்கள் நான் பக்கத்திலேயே இருக்கிறேன். கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள் மார்கரெட். டேவிட்டும், ராபர்ட்டும், மற்றவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர் மனைவியின் அருகாமை தந்த பாதுகாப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்குள் நுழைந்த கிளைவ் வின் நினைவுகள் கி..பி.1743 க்குள் அழைத்து வருகிறது.
"ராபர்ட் உன்னை பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்து விட்டது, என்னால் உன்னை வைத்து சமாளிக்க முடியவில்லை. இதுவரை இருமுறை போலீஸ் வரைக்கும் என்னை கொண்டு போய் விட்டாய். பதினேழு வயதில் இவ்வளவு தொல்லைகள் செய்பவனை நான் பார்த்த்தே இல்லை.உனக்கு “ஈஸ்ட் இந்தியா”கம்பெனியில் வேலைக்கு சொல்லியிருக்கிறேன். அவர்கள் இங்கு வேலை காலி இல்லை வேண்டுமென்றால் இந்தியாவில் வேலை போட்டு கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அதற்கான கடிதத்தையும் கொடுத்து விட்டார்கள். நீ என்ன செய்கிறாய் நாளை “மெட்வேயிலிருந்து விஞ்செஸ்டர் கப்பல் கிளம்புகிறது. அதில் கிளம்பி சென்று இந்த கடித்த்தை கொடுத்து வேலைக்கு சேர், அதன் பின் எனக்கு தகவல் அனுப்பு. தந்தை சொல்லிக்கொண்டிருக்க மெல்ல தலையை ஆட்டினான் ராபர்ட்
ராபர்ட்டுக்கு வெயில் கண்ணை கூசிற்று, தான் இதுவரை பார்க்காத ஆட்கள், கறுப்பாய் நிறங்கள், அட..அவர்கள் மொழி கூட வித்தியாசமாய் உள்ளதே? கும்பல் கும்பலாய் வருகிறார்கள் என்னை கண்ட்தும் ஏன் ஒதுங்கி போகிறார்கள். வியப்பில் மனதுக்குள் அசை போட்டவாறு ஒருத்தருக்கு ஒருத்தர் வித்தியாசமாய் வேறு இருக்கிறார்கள், சே..இந்த இடத்துக்கு வர்றதுக்குள்ள, தேவையில்லாமல் யார்கூடவோ சண்டை வேற போட்டு, வந்து சேர ஒரு வருசத்தையே முழுங்கிடுச்சு, இப்படி யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவன் தோளில் யாரோ தட்ட திரும்பி பார்த்தான்.ஒரு வெள்ளை சிப்பாய் நின்று கொண்டிருந்தான். எங்கு போகிறாய்? நான் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு போகிறேன், இவன் பதில் சொல்ல அவன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை காண்பித்து அங்கு செல் சைகை மூலம் சொல்கிறான்.

இவன் கொடுத்த கடிதத்தை வாங்கி பார்த்தவன் இவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு பிறகு புன்சிரிப்புடன் இவன் கையை பிடித்து குலுக்கி என் பெயர் வில்ல்லியம்ஸ். நீ இனிமேல் எனக்கு உதவியாளனாக இரு. ராபர்ட் அதற்கு மறு மொழி எதுவும் பேசாமல் ஒரு புன்சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தான்.
வில்லியம்ஸ் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தான். அவனுக்கு கீழ் ஏராளமான இந்தியர்கள் சுமை கூலிகளாக இருந்தனர். அங்கிருந்துதான் யுத்த களங்களுக்கு வெடி பொருட்கள் போன்றவை சப்ளை ஆகிக்கொண்டிருந்தன. பொருட்களை கை மாற்றி விட்டு நிறைய வரும்படி பார்த்தான் வில்லியம்ஸ். ராபர்ட் அவனுக்கு உதவியாளனாக இருர்ந்ததில் அவனுடைய நெளிவு சுழிவுகளை இவனும் கற்றுக்கொண்டான். மிக விரைவில் காசு பணம் இவனிடம் புழங்க ஆரம்பித்தது. ஆனாலும் அவன் உள் மனம் இந்த வேலையை விட உயர்ந்த வேலையை எதிர்பார்க்க ஆரம்பித்தது.
. வில்லியம்ஸ் ஒருவாரம் உடல் நிலை சரியில்லாமல் போக முழு பொறுப்பும் இவன் பார்க்க வேண்டியதாகிவிட்டது. இவன் அப்படி பார்த்துக்கொண்டிருந்த பொழுதே “வில்லியம்ஸ்” பற்றி பல்வேறு புகார்கள் இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு சென்றது. அவர்களும் வில்லியம்சை உடனே இங்கிலாங்குக்கு விசாரணைக்கு வரும்படி கட்டளையிட்டனர். விசாரணையின் முடிவில் இனிமேல் இந்த கோட்டையை ராபர்ட்டே கவனிப்பான் என்று முடிவெ செய்து விட்டது
இப்பொழுது முழு பொறுப்பையும் ஏற்றிருந்த ராபர்ட்டுக்கு வயது வெறும் இருபதுதான் ஆகியிருந்தது. ராபர்ட் பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே எதிர்பாராமல் ஆஸ்திரிய வாரிசுரிமை போரில் பிரிட்டனிடம் அங்கிருந்த கோட்டை பறிகொடுத்து விட்டது பிரான்ஸ். அதற்கு பழி வாங்குவதற்கு சந்தர்ப்பம் பார்த்த பிரெஞ்சு படைகள், ராபர்ட் பொறுப்பில் இருந்த கோட்டையை கைப்பற்றிக்கொண்டன. இவன் எப்படியோ தப்பித்து பக்கத்திலுள்ள பிரிட்டனின் மற்றொரு கோட்டைக்கு சென்று விட்டான். அங்குள்ளவர்களீடம் சிறிது சிப்பாய்களை மட்டும் கொடுங்கள், என்ற் சொல்லி அவர்களை வைத்துக்கொண்டு பிரெஞ்சுப்படையிடம் சண்டையிட்டு மீண்டும் இவன் பொறுப்பில் இருந்த கோட்டையை மீட்டுக்கொண்டான்.
இந்த நிகழ்ச்சி இங்கிலாந்திலிருந்த கம்பெனி தலைமையகத்தை கவர்ந்து விட்டது. யுத்த களத்திற்கு அவனை அனுப்பி வைக்க தீர்மானம் எடுத்த கம்பெனி ஒரு படைக்கு தளபதியாகவும் நியமித்தது. ராப்ர்ட்டின் புத்தி கூர்மையும் செயல் திறனும் இந்த வாய்ப்பை தக்கபடி பயன்படுத்திக்கொண்டது. இவன் படையேற்று சென்ற இடமெல்லாம் வெற்றி. கம்பெனி இப்பொழுது இவனை கூர்மையாக கவனிக்க தொடங்கி விட்ட்து. அப்புறம் என்ன சீக்கிரமே தலைமை தளபதியாக நியமிக்கபட்டான். இதைவிட இவனுக்கு பேரதிர்ஷ்டமாக நண்பன் எட்மெண்ட்மஸ்கில்னே தன் தங்கை மார்க்கரெட்டை இவனுக்கு மணமுடித்து கொடுத்ததுதான்.

"கிளைவ்” பட்டத்துடன் தலைமை தளபதியாக உயர்த்தப்பட்ட ராபர்ட் தன் குடும்பத்தை நேசித்தான் (நாமும் இனி அவரை “ர்”) போட்டே அழைப்போம். குடும்ப வாழ்க்கையில் உயர்ந்தவராய் இருந்தாலும் இளமையில் தான் பட்ட துன்பம் எல்லாம் வறுமையினால்தான் என்று நினைத்திருந்த கிளைவ்” அந்த பணத்தை வெகு சீக்கிரம் எப்படி சம்பாதிப்பது என்று எல்லா திறமைகளையும் காட்ட ஆரம்பித்தார். இதனால் பல்வேறு புகார்கள் அவர் மீது சொல்லப்பட்டது. இங்கிலாந்து நிர்வாகம் கிளவ்வை பம்பாய்க்கு மாற்றியது. அடுத்து அவரை வங்காள கவர்னராக அறிவித்தது.
இப்படி படிப்படியாக உயர்ந்த நிலைக்கு சென்று கொண்டிருந்த கிளைவுக்கு இவர் மீது கூறப்பட்ட புகார்களினால் இவருடைய செல்வாக்கு ஆட்டம் காண ஆரம்பித்த்து.
இதுவரை சம்பாதித்த பணத்தை எப்படி எடுத்துக்கொண்டு நாட்டுக்கு செல்வது? யோசித்த கிளைவ் அனைத்தையும் தங்கமாக்கி அதை கப்பலில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவு தவறாகி போனது. இங்கிருந்து கிளம்பி சென்ற கப்பல் வழியில் புயலிலும், மழையிலும் அடிபட்டு கடலுக்குள் மூழ்கி போனது. இதனால் துவண்டு விடவில்லை கிளைவ். தான் சமபாதித்து வைத்திருந்த ஏராளமான செல்வத்துடன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு நாடு செல்ல முடிவு எடுத்தார்.
லண்டன் வந்திறங்கிய கிளைவ் தாம் இப்பொழுது சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனல்ல என்று முடிவு செய்தவர் இந்த லண்டனில் வசிக்கும் பிரபுக்களுக்கு இணையாக வசிக்கவேண்டும், முடிவு செய்தவர் தான் கொண்டு போன பணத்தில் பெரிய பண்ணை வீட்டை அந்த லண்டன் மாநகரிலேயே வாங்கி குடும்பத்துடன் குடி புகுந்தார்.
இது போதாதா அங்குள்ள பிரபுக்களுக்கு ! அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்தனர். பாராளுமன்றத்திலும் அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்தனர். வழக்குகளும் அவர் மீது போடப்பட்டது.
பத்து வருடங்கள் இந்த வழக்குகளுக்கு பதில் சொல்லியே அலுத்து போனார் கிளைவ். ஆரம்பத்தில் இருந்த தைரியமும்,வேகமும் கொஞ்சம் கொஞ்சமுமாக கரைய ஆரம்பிக்க இப்பொழுது மன நோயாளியாக மருத்துவமனையில் இருந்து சரியாகிவிட்டதாக டாக்டர் சொன்னதால் வீட்டுக்கு அனுப்ப பட்டிருக்கிறார்.
திடீரென விழிப்பு வர பக்கத்தில் மனைவியை தேடினார்.”கணவர்”தூங்கி விட்டார் என்று எழுந்து சென்று விட்ட மார்கரெட்டை உடனே பார்க்க வேண்டும் என்று வேகமாய் எழுந்த கிளைவ் உடம்பு பலகீனத்தால் தடுமாறி விழ போனவர், தன்னை யாரோ பிடித்து தள்ளி விட்டதாக கருதி பெரும் கூச்சலுடன் அங்கு ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடினார். டேபிளின் மேல் ஆப்பிள் வெட்டுவதற்கு வைக்கப்பட்டிருந்த கத்தி கண்ணில் பட அதை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு எதிரில் இல்லாத எதிரியை விரட்டிக்கொண்டிருந்தார்.


வரலாறு இராபர்ட் கிளவை பற்றி இப்படி சொல்கிறது “இராபர்ட் கிளைவ்” ஆரம்ப கால வாழ்க்கை போராட்டமானதாக இருந்தாலும் அது உடலளவான போராட்டமாக இருந்ததால் அவரால் விரைவில் வெற்றி காண முடிந்தது. இறுதி காலத்தில் அவருக்கு சட்ட ரீதியான போராட்டமாக மாறி விட்டதால், அவர் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி அவரது முடிவு வருந்ததக்கதாய் ஆனது.)

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Nov-18, 10:52 am)
பார்வை : 141

மேலே