மார்கழிப் பாக்கள்

மார்கழிப் " பா "
******************************
தொன்றுதொட்டுப் பாடிவந்த தூயதமிழ்த்
தோத்திரத்தும் தோன்றாத தொன்மையனை !
பண்டைப் பழம்பாடல் பூக்கொண்டு
அர்ச்சித்தும் போற்றப் புலரானை !
அன்றிருவர்க் காக அழல்வடிவாய்
அண்டம் உயர்ந்தெழுந்தோன் ! அன்பாலே
இன்றுநமக்கா குன்றிநின்று குன்றானான்
இக்கருணை பாடேலோர் எம்பாவாய் !
*********************

பள்ளியெழுச்சிப் " பா "
*************

அறுபத்து மூவரிலை -- ஆறா
அருட்தவத்தின் அன்பரிலை ! ஞானக்
குருவுற்றுக் குன்றா நிலைநிற்கும்
குன்றுமணிச் சீடரிலை ! யாழில்
விரல்பரப்பி மெல்லிசைப் பந்தலினை
வேயநல் வித்தகர் இல்லை !
குரலெழுப்ப ஏழையானோம் ! கொற்றவனே
குற்றமறப் பள்ளி எழுந்தருளாயே

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Dec-18, 6:59 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

மேலே