கடல்

தாவிக்குதித்து தண்ணளி செய்வதும் கடல்
வெள்ளலை ஒளிவீசத் திகழ்வது கடல்
உலகோரை உய்விப்பது கடல்,
உயிரினங்கள் இன்பம் துய்ப்பது கடல்
எண்ணற்ற வளங்கள் நிறைந்தது கடல்,
கதிரோனின் கிரண்ங்களிலும், சந்திரனின் ஒளியினிலும்
மிடுக்குற்று விளங்குவது கடல்,
மனதை வருடும் மாலைப் பொழுது இன்பத்திற்குக் கடல்,
புத்துணர்ச்சித் தருவது கடல்
நீலப்பட்டாடை அணிந்து நெஞ்சினில் நிறைவது கடல்
பரிமளிக்கும் கடல்
சில்லென தென்றல் தவழ, மேனி சிலிர்ப்பெய்த
ஆர்ப்பரிக்கும் அலையையுடையது கடல்
தஞ்சம் அடைந்தோரைத் தன்னுள் தாவியணைத்து
ஈர்ப்பதுவும் கடலே!

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி (23-Feb-19, 3:26 pm)
Tanglish : kadal
பார்வை : 83

மேலே