புலன்களின் போக்கு
புலன்களின் போக்கு
புதிரானதாய் இருக்கும்
அதனனதன் நிலை அறியும் போது
அதன் காரணி நாமென
நாணமடைய வேண்டிய
நாசமான குணமொன்று
நம்முள் குடியிருக்கும்.
புதியதாய் உதித்ததைப் போல்
பலர் கதை தினம் பேசி
பதர் போன்ற அறிவால்
பளிச்சென தெரிவார்
அவரெல்லாம் அனிச்சம் மலர் போல்
குழைஞ்சு குறுகுவார்
குறையுடைய எண்ணம்
கொண்ட கோகுல மாந்தர்.
ஆற்றலும் அறிவும்
அணி சேரும் போது - உலகில்
மாற்றமும் மறமும்
நிலைகாணும் நேர்வில்
ஏற்றமும் எழிச்சியும்
எத்திசையையும் இயக்கும்
ஏற்றமிகு வாழ்வில்
இவ்வையகம் திளைக்கும்.
-- - நன்னாடன்