என்னவள்

சூரியனையும் கடைந்து தங்க குழம்பில் பினைத்து ...நிலவே உன் தேகத்திற்கு ஆடை நெய்தவன் யார் ... வெண்ணிற வெண்பாவே!!சித்திரை நிலவும் சிறிதாக உடைந்து நெய்தலில் பூத்த பாவை உனக்கு அணிகலனாக அமைந்தது ..ததும்பிய தாழையோ உன் செவிகளில் தூரிகை ஆடியது ..உன் விழி திறக்கையில் விடியலும் மயங்கியது ..என்னவள் சிரிப்பிற்கு என் சிந்தனை துளிகளும் சிதறியது..உன்னிடை நெழிவுகளை கண்டவுடன் என்னுடைய தேகம் தவித்த நின்றது ..பல கவிஞனும் காணத கற்பனையே ..நீ என் சிந்தையில் உதித்தது ஏன் ..

எழுதியவர் : Poetu pravin (22-Mar-19, 12:43 am)
சேர்த்தது : Poetu pravin
Tanglish : ennaval
பார்வை : 257

மேலே