மரங்கள்

மரங்கள் !

தோளோடு தோள் நின்ற
தோழனை வேண்டாமென்று

சுட்டு பொசுக்கும் சூரிய
வெயிலை தன்னுடல் ஏந்தி
காலுக்கு கீழே தவிக்கும்
ஜீவன்களுக்கு !
குளுமை அள்ளி கொடுத்தும்

வானத்தில் விரையும் மேகத்தை
கண்ணால் கவர்ந்து காதல் பேசி
பூமியை நனைக்க மழையை
பொழிந்தும் !

பேசா மடந்தை தூணாய்
நின்று மண்ணின் பரப்பை
இறுக்கி பிடித்து
மலைகளின் சரிவை
தடுத்து நிறுத்தியும் !

காடுகளாய் வளர்ந்து
பருவத்தின் நிலைக்ளை
பக்குவப்படுத்தி பூமியை
காத்தும் !

வெட்டி வீழ்த்தி
காசாக்கி கரியாக்கி
மர சட்டமாக்கி
சாலைகள் விரிய,
கட்டிடங்கள் கட்ட

கண்களில் பேராசையாய்
இன்னும் கிடைக்குமா ?
தேடிக்கொண்டிருக்கிறான்

வெயிலால் காய்ந்து கருகியும்
நாக்கு வறண்டு போன பின்னால்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Apr-19, 1:05 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : marangkal
பார்வை : 259

மேலே