இது என்ன
இது என்ன?
===========================================ருத்ரா
இது என்ன?
உணர்வுகள் கேட்டன.
அறிவு பிய்த்துப் பிய்த்துப்போட்டது.
ஒரு தொடுதல்
ஒரு பார்வை
ஒரு கீற்றுச்சிரிப்பு.
கதவே இல்லாத ஒரு வாசல்
சாவியே இல்லாத ஒரு பூட்டு
செடியே இல்லாத மலரின் மொட்டு
முகமே இல்லாத கண்கள்
எல்லாம் திறந்து கொண்டன.
வெறும் துணியாய் இருந்த
சல்வார்..கமீஸ் நிறைய
பூக்கள் பட்டாம்பூச்சிகள்..
என்ன இது?
கேள்வி முன்பின் முறுக்கிக்கொண்டது.
இதைத்தான்
அவனிடம் கேட்டேன்.
அவன்
ஙே ஙே ஙே என்றான்.
இது தான் அந்த
தேவன் மொழியா?
சினிமாப்பாட்டு அப்படித்தான்
ஒலித்தது.
==============================================