இல்லையே நல்லது இல்லையே

தொடர்வண்டி நிலையத்தில் குடிநீர் இல்லை
பேருந்து நிலையத்தில் இலவச கழிவறை இல்லை
காவல் நிலையத்தில் முறையான விசாரணை இல்லை
கண்காணிக்க உரிய காவல் கண்காணிப்பாளர் இல்லை

கல்விக் கூடங்களில் சரியான மாணவர்கள் இல்லை
கடமையை செய்ய நல்ல அரசு ஊழியர்கள் இல்லை
தரமான சாலைகள் தடந்தோறும் இல்லை
தனியாக செல்லக் கனந்தோறும் தொல்லை

எதுக்கும் எவற்றிற்கும் பணமே பெரும் எல்லை
எச்செயலும் தடுமாறும் கேட்பின் பணம் என்ற சொல்லை
ஒருவாறு இயங்குது பூமி என்ற உருண்டை
அறிந்து தெளிந்த மாந்தருக்கு அனைத்திலுமே கொள்ளை .
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-May-19, 6:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 51

மேலே