அடிமையாக்கிவிடும்

கன்னிப் பருவத்தில்
குந்திதேவி
கர்ணனை ஈன்றெடுத்தாள்,
இந்த உண்மையை
பிறரிடம் சொன்னால்

தன் மதிப்போடு
பாண்டவர் மதிப்பும்
பாழ்படுமென குந்திதேவி
உண்மையை இறுதி வரை
மூடி மறைத்தாள்

கர்ணன் ஒரு மாவீரன்
துரியோதனனுக்கு
உதவி செய்தான்
குருவின் நாட்டையே
குருதிக் காடாக்கினான்

பாதுகாக்க வேண்டிய
பல செயல்களில் ஒன்று
இரகசியம் காத்தல்
கண்டதை எல்லாம்
கண்டபடி பேசக்கூடாது

இரகசியத்தை
வெளியிடாதவரை
அது உனக்கு அடிமை,
கசியவிட்டாலோ—நம்மை
அது அடிமையாக்கி விடும்

எழுதியவர் : கோ. கணபதி. (2-Jun-19, 8:15 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 63

மேலே